சித்திரா பூரணை
- Details
- Super User
- Høytider
- Hits: 1218
வருடம் பிறந்து முதலாவதாக வரும் பூரணை என்பதோடு எமது தலை விதியை நிர்ணயிக்கும், எமது வாழ் நாள் கணக்குகளை எழுதிப் பேணும் யமதர்மராஜனின் கணக்குப்பிள்ளையாகிய சிதிரகுப்தர் திருவவதாரம் செய்த நாளுமாகும்.
தமது தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் தாயை நினைத்து விரதமனுட்டித்துப் பிரார்த்தனை செய்வதால் அன்னாரின் ஆன்மா சாந்தி பெறுகின்றது. அன்று உப்பைத் தவிர்த்து பசும்பால், தயிர் உண்ணாமல் இருத்தல் சிறப்பு. இதனால் பாவச்சுமை குறையும்.
மூலம் : இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்ற பொன்விழா வெளியீடு 2006